முக அழகு குறிப்புகள்...

Sekar Tamil
இன்றைய காலத்தில், அழகை பராமரிப்பதில், பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கடையில் கிடைக்கும் க்ரீம்கள், லோஷன்களை உபோயோகப்படுத்துவதற்கு பதில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய முக அழகை பேண முடியும்.


பச்சை பயிறு மாவு, கடலை மாவு, தர்பூசணி சாறு ஆகிய மூன்றையும் கலந்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகும். 


ஜாதிக்காய், வேப்பன்கொழுந்து, சந்தனம் ஆகிய மூன்றையும் நீர் கலந்து அரைத்து, முகத்தில் தடவி வந்தால், முகத்தில் காணப்படும் கருப்பு திட்டுகள் நீங்கும். 


வெள்ளிரிக்காய் விதையை, பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், கருவளையங்கள் மாறும். 


இரவு படுக்கும் முன்பு, ஆலிவ் எண்ணையை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, தண்ணீர் விட்டு கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். 


Find Out More:

Related Articles: