முகம் பொலிவு பெற வேண்டுமா....பயன்படுத்துங்கள் இந்த குறிப்பை....

Sekar Tamil
முகம் புத்துணர்ச்சியுடன் எப்போதும் பொலிவாக இருந்தால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை. சில நேரங்களில் களைப்பாக, பொலிவிழந்து காணப்படுகிறது. இதை சரி செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பினை நாம் பின்பற்றலாம். 


தேவையான பொருட்கள் :


ரோஸ் வாட்டர் - அரை கப் 
கற்றாழை சதைப்பற்று - 1 டீ ஸ்பூன் 
விட்ச் ஹாஜல் - 1 டீ ஸ்பூன் 
வெள்ளரிக்காய் சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
லாவெண்டர் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்


வெள்ளரிக்காய் சாற்றுடன், கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அளவாக கலந்து கொண்டு, அதை சுத்தமான ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இது பார்ப்பதற்கு ஸ்ப்ரே பதத்தில் இருக்கும். 


முகம் பொலிவு இழந்து காணப்படும் போது, இதை முகத்தில் தடவி வந்தால், முகம் உடனே புத்துணர்ச்சி பெறும். இதோடு விழாக்கள், திருமணங்களில் கலந்து கொள்வதற்கு முன்பு, இதை அப்பளை செய்து விட்டு, மேக்கப் போட்டால் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.


Find Out More:

Related Articles: