கால்ல விழுந்துடுவேன் தம்பி... அந்த வேலைக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் தம்பி...

Sekar Chandra
சென்னை:
காலில் விழுந்துவிடுவேன் தம்பி. அந்த வேலைக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் தம்பி... யாருங்க இப்படி கதறி இருக்கிறது தெரியுமா?


வேற யாரு... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி போன பல்முகம் கொண்ட தம்பி ராமையாதான் அவர். இயக்குனர், காமெடியன், குணச்சித்திர நடிகர், வில்லன் என்று நடிப்பால் கலக்குபவர் கூறியதுதான் அது. எதற்காக தெரியுங்களா? நாளை அவர் நடித்துள்ள சமுத்திரக்கனியின் "அப்பா" படம் வெளியாகிறது. இதுகுறித்து ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் போதுதான் இப்படி கதறி இருக்கிறார்.


ஏன் என்றால் அரசியலுக்கு அழைப்பு வந்ததா? என்று கேட்கப்பட... அய்ய்யாயா... யாராவது அப்படி அழைக்க வந்தால் அவர்கள் நுழையும்போதே அவர்கள் காலில் விழுந்து விடுவேன். நம்மால முடியாது சாமி. அப்படியே ஒருஓரம் சாரமாக நான் வாழ்ந்துக்கிட்டு போயிடறேன்னு சொல்வேன் என்று தன்பாணியில் கூறியுள்ளார். எப்பூடி?


Find Out More:

Related Articles: