தனுஷ் ரொம்ப பெருந்தன்மையானவர்! -கீர்த்தி சுரேஷ்

Sekar Chandra
‘ரஜினி முருகன்’ ஹிட்டுக்குப் பிறகு தனுசுடன் 'தொடரி' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்யின் 60-வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விஜய் படம் குறித்து எந்த தகவலும் வெளியில் லீக் அவுட் செய்யக்கூடாது என்ற கண்டிஷன் இருப்பதால் அதைப்பற்றி எதுவும் பேசாத அவர், தனுஷின் தொடரி படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசித்தள்ளுகிறார்.


அந்த படத்தின் டைரக்டர் பிரபுசாலமன் ரொம்ப பொறுமையானவர். நாம் என்னதான் சொதப்பினாலும், அவர் எதிர்பார்க்கிற நடிப்பு வருவது வரை பொறுமையாக கேட்டு வாங்குவார். அவரிடத்தில் நடிப்பின் நுட்பங்களை நிறைய நான் கற்றுக்கொண்டேன். அதேபோல், தனுசுடன் நடித்த அனுபவம் ரொம்ப புதுமையானது. அவர் ஒரு மிகப்பெரிய நடிகர் என்றாலும், நான் முதல் நாள் நடித்ததை தள்ளி நின்று பார்த்த அவர் என்னிடம் வந்து 'ரொம்ப நல்ல நடிக்கிறீங்கம்மா' என்று சொன்னார். 


அது எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அதோடு 'தொடரி' படத்தில் அவர்தான் ஹீரோ என்ற போதும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் மெயின் ரோலில் நடித்திருக்கிறார். அவரைச் சுற்றித்தான் கதை என்கிறார். இப்படி சொல்வதற்கே ஒரு பெருந்தன்மை வேண்டும். ஆனால் 'தொடரி' படத்தில் நான் ஒரு சிறிய பார்ட்டுதான். நடிகையின் டச்சப் பெண்ணாக, தனுஷின் காதலியாக நடித்திருக்கிறேன் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.        


Find Out More:

Related Articles: