காதை பொத்திக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் விமல்

Sekar Chandra
சென்னை:
முடியாதுங்க... முடியவே முடியாது என்று காதை பொத்திக்கொண்டு எஸ்கேப் ஆகிறாராம் களவாணி நடிகர். ஏன் தெரியுங்களா?


களவாணி படம் கொடுத்த ஹிட்... நடிகர் விமலை திரையரங்கில் வலுவான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் அவரை அடுத்த ராமராஜன் ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது.


தொடர்ந்து கிராமக்கதைகளிலேயே நடித்து வந்த அவர் தன் மேல் ராமராஜன் இமேஜ் அழுத்தமாக விழுவதை தாமதமாக புரிந்து கொண்டுள்ளார். இப்போ யாராவது அண்ணன், தம்பி கதை. கிராமத்து கதை என்று சொன்னாலே காதை பொத்திக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறாராம்.


இப்போது நவ்தீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அஞ்சான் சூர்யா கெட்டப்பில் அதகளம் பண்ணுகிறாராம். இனிமே அதிரடியான கதைகள் இருந்தால் மட்டுமே கதை சொல்லணும் என்ற கண்டிஷனோடுதான் கதை கேட்கவே உட்காருகிறாராம்.


Find Out More:

Related Articles: