வசனகர்த்தா அவதாரம் எடுக்கும் யுகபாரதி

Sekar Chandra
‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா..., ‘சந்திரமுகி’யின் கொஞ்ச நேரம்... உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் யுகபாரதி. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற பாடலாசிரியராக கடந்த 14 வருடங்களாக பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் யுகபாரதி. பாடலாசிரியர் யுகபாரதி விரைவில் வசனகர்த்தா யுகபாரதியாக அவதாரம் எடுக்கிறார்.


உதயநிதி ஸ்டாலின் படம் ட்ராப்பான நிலையில் விஷ்ணுவை வைத்து இப்போது ஒரு படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். அவர் இயக்கவிருக்கும் புதிய படத்தை மூலம் தான் யுகபாரதி வசனகர்த்தா அவதாரம் எடுக்கிறார்.


சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிக்கும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு ஜூலை 3வது வாரத்தில் துவங்குகிறது. இதில் பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். நானும் ரௌடிதான் படத்திற்குப்பிறகு அவர் வில்லன் வேடம் ஏற்றுள்ள படம் இது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.



Find Out More:

Related Articles: