சுந்தர் சிக்கு வாழ்த்துக் கூறிய பிரபல இசையமைப்பாளர்

Sekar Chandra
'முத்தின கத்திரிக்காய்' திரைப்படத்திற்கு பிறகு சுந்தர் சி, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள 100-வது திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படம் மெகா பட்ஜெட் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆகியவற்றை நாம் ஏற்கனவே அறிந்தோம்.


இதையடுத்து இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியிருப்பதை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளார்.  'ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள 100-வது திரைப்படத்தில், நான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்' என்று பதிவு செய்துள்ளார்.


மேலும் இந்த படத்தின் தமிழ் ஆக்கத்தில் விஜய்யும், தெலுங்குவில் மகேஷ் பாபுவும் நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Find Out More:

Related Articles: