சிம்புவுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ஷ்ரேயா

frame சிம்புவுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ஷ்ரேயா

Sekar Chandra
'இது நம்ம ஆளு' திரைப்படத்திற்கு பிறகு சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 


இதில் சிம்பு மூன்று கெட்டப்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஒரு கதாநாயகியாக நடிகை ஷ்ரேயா நடிக்கவுள்ளார். சிம்பு-ஷ்ரேயா நடிக்கவுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நாளை மைசூரில் நடைபெறவுள்ளது. 


மேலும் சிம்புவுடன், ஷ்ரேயா நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் இசையமைப்பில் இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் உருவாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles:

Unable to Load More