வேண்டாம்பா... வேண்டவே வேண்டாம்... மாஜி வில்லன் கதறல்

Sekar Chandra
சென்னை:
வேண்டாம்பா... வேண்டவே வேண்டாம்பா... என் பொழப்புல மண் அள்ளி போட்டு விடாதீங்க என்று இவர் கெஞ்சாத குறைதான். யார் என்று தெரியுங்களா?


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்தவர் மொட்டை ராஜேந்திரன். ஸ்டண்ட் நடிகராக தடம் பதித்து பாலாவின் நான் கடவுள் படத்தில் கொடூர வில்லத்தனத்தை காட்டியவருக்கு அதுக்கு பிறகு ஏறுமுகம்தான். வில்லன்... வில்லன்... என்று பல வில்லத்தனம் செய்தவர் தற்போது தன் ரூட்டை மாற்றிக் கொண்டு காமெடியில் அதகளம் செய்து வருகிறார். நான் கடவுள் ராஜேந்திரனாக இருந்தவர் இப்போது மொட்டை ராஜேந்திரன் என்றே அழைக்கப்படுகிறார்.


இவர்தான் இப்படி அலறி உள்ளார். எதற்கு என்றால், சமீபத்தில் இவருக்கு மதுரை ரசிகர்கள், ரசிகர் மன்றம் வைத்துவிட்டு அவரிடம் அனுமதி பெற முடிவு செய்து சந்தித்துள்ளனர். அவ்வளவுதான் "திடுக்" ஆனவர், இதெல்லாம் நமக்கு தேவையாப்பா. எல்லா நடிகர்களின் அன்பையும் பெற்று பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.


ஏதோ இப்பதான் நம்ம ரயிலு ஸ்பீடு பிடிச்சுக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கு. ரசிகர் மன்றம் வைச்சு அதை தலைக்குப்புற கவிழ்த்து என் பொழப்பை கெடுத்திடாதீங்க. தயவு செய்து அதெல்லாம் வேண்டாம் என்று அழாத குறையாக கூறி அனுப்பி வைத்துள்ளார். இதுதான் தற்போது கோலிவுட்டை சுற்றி சுற்றி வருகிறது.



Find Out More:

Related Articles: