நிருபர்களிடம் கோபப்பட்ட...காதல் ஜோடிகள்

Sekar Tamil
பாலிவுட் நடிகர் இர்பான் கான் நடித்துள்ள 'மடாரி' திரைப்படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதை காண காதல் ஜோடிகள் ரன்வீர் சிங்க் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் கலந்துக் கொண்டனர்.


அப்போது இவர்களை பார்த்த பத்திரிக்கை நிருபர்கள், ரன்வீரிடம் உங்கள் இருவருக்கும் நிச்சியதார்தம் முடிந்து விட்டதாக வெளியில் பேசுகிறார்களே.... உண்மையில் முடிந்து விட்டதா? என்று கேட்டுள்ளார். 


இதற்கு ரன்வீர், படங்களை பற்றிய நல்ல விஷயங்களை மட்டும் கேளுங்கள்... பெர்சனல் விஷயங்களை கேட்காதீர்கள்... அதை எல்லாம் உங்களிடம் என்னால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.


மேலும் தீபிகா படுகோன், திருமணம் செய்யும் எண்ணம் இப்போது இல்லை என்று கூறியுள்ளார். இவர் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளதால், அங்கும் நிறைய சம்பாதித்த பின் காதலரை திருமணம் செய்வார் என தெரிகிறது.



Find Out More:

Related Articles: