கதை பிடிக்க... கால்ஷீட் இடிக்க... விலகினார் விஜய்...

Sekar Tamil
சென்னை:
பிரமாண்ட படம்... கதை பிடித்திருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிட்டாராம். இந்த விஷயம்தான் கோலிவுட்டை கலக்கி வருகிறது.


யார்? எந்த படம் என்று பார்ப்போம் வாங்க! இளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பு எப்போதும் எகிறதான் செய்யும். 
தற்போது தெறி படம் கொடுத்த செம "ஹிட்"  இவரது வியாபாரத்தின் எல்லையை இன்னும் அதிகரிக்க செய்து விட்டது. 


இந்நிலையில்தான் சுந்தர்.சி இயக்க உள்ள மிக பிரமாண்டமான ரூ.250 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இதை அவரும் மறுக்கவில்லை. இப்போது படத்தில் விஜய் நடிக்க முடியாத நிலையாம். 


படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போய்விட்டது. ஆனால், கால்ஷீட்தான் உதைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 250 நாட்கள் கேட்க விஜய் நடிக்க மறுக்க... தற்போது மீண்டும் அந்த படக்குழு ஹீரோவை தேடும் படலத்தை தொடங்கி உள்ளதாம்.


Find Out More:

Related Articles: