ஐதராபாத்:
சம்பளம் ரூ.100 கோடியாம்... என்ன மூச்சை அடைக்குதா... உண்மைங்க.. உண்மை. யாரோட சம்பளம் தெரியுங்களா?
தொடர்ந்து சக்ஸஸ் இயக்குனராக மிளிர்ந்து வரும் தெலுங்கு டைரக்டர் ராஜமவுலிதான் இவ்வளவு சம்பளம் வாங்க போகிறார் என்று ஒரு பரபரப்பு தகவல் உலா வருதுங்கோ... வருதுங்கோ... எப்படி தெரியுங்களா?
'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கி கல்லா நிரம்ப ஆரம்பித்து விட்டது.
தமிழ்ப்பதிப்பு ரூ.45 கோடி, கேரள ரிலீஸ் உரிமை ரூ.15 கோடி, வடமாநில ரிலீஸ் உரிமை ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடிக்கு விற்பனையாகிடும்னு சொல்றாங்க. இதில் தமிழ் பதிப்பு விற்பனை முடிந்தே விட்டதாம்.
இந்நிலையில் தமிழ், மலையாளம், இந்தி பதிப்பு வியாபாரத்தில் 50 சதவீத தொகையை ராஜமவுலி தனது சம்பளமாக கேட்டுள்ளதாகவும், இந்த தொகை ரூ.100 கோடியை தாண்டும் என்று சொல்றாங்க.
இதுதான் இந்திய திரையுலகில் இதுவரை எந்த இயக்குனரும் பெறாத பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.