கபாலியை வைத்து காலி செய்ய நினைத்தார்கள்... ரஞ்சித்

Sekar Tamil
சென்னை:
என்னை காலி செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்... இதை சொன்னது யார் தெரியுங்களா? கபாலி டைரக்டர்தான்.


என்ன விஷயம் என்று பார்ப்போமா? கபாலி படம் திரைக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை வசூலில் பல சாதனைகளை செய்துவிட்டது. 25 நாட்களை கடந்த நிலையிலும் தியேட்டர்களில் கும்பல் குறைந்தபாடில்லை. 


இந்நிலையில் இப்படத்தின் ரஞ்சித் கலந்துரையாடல் ஒன்றில் ‘இந்த படம் ரிலீசாகிய அடுத்த நிமிடம் நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என்று எனக்கு தெரியும். இதை என் உதவி இயக்குனரிடமே தெரிவித்து இருந்தேன்.


படம் சரியில்லாமல் இருந்தால் 25 நாட்கள் இத்தனை தியேட்டர்களில் ஓடியிருக்காது, என்னை காலி செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Find Out More:

Related Articles: