பிருந்தாவனமாக தொடங்கிய ..... ராதா மோகன் - அருள் நிதி

Sekar Tamil
'உப்பு கருவாடு' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகன், அருள் நிதியை வைத்து ஒரு புது திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றதோடு, தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அருள்நிதிக்கு ஜோடியாக இந்த படத்தில் தன்யா நடிக்கவுள்ளார். நடிகை தன்யா பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதன்முறையாக  ராதா மோகன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில், விவேக் காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த படத்திற்கு 'பிருந்தாவனம்' என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் இசையமைப்பாளராக 'ஜில் ஜங் ஜக்' விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். வாசன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்ஷன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். 


இந்த படத்தின் பூஜை விழா இன்று கர்நாடகாவில் உள்ள சாக்லேஷ்பூரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் வழியை பின்பற்றும் வகையில், தனது 27,038 001 செடி கன்றை இன்று நட்டார்.


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: