சிறுமிக்கு செயற்கைகால்... உதவி செய்த சமந்தா...

frame சிறுமிக்கு செயற்கைகால்... உதவி செய்த சமந்தா...

Sekar Tamil
சென்னை:
அவரா... அவரா... என்று அனைவரையும் புருவத்தை உயர வைத்து விட்டார்.


யார் தெரியுங்களா... நடிகை சமந்தாதான். பல்வேறு சர்ச்சைகளும், வதந்திகளும் இவரை சுற்றி உலா வந்தாலும் இவர் செய்துள்ள இந்த உதவி யாராலும் மறக்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது.


அப்படி அவர் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? இதே அதுதான் இந்த செய்தி... தான் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை பல்வேறு சமூக நல பணிகளை பிரதியுஷா பவுண்டேசன் மூலம் செய்து வருகிறார் நடிகை சமந்தா.


இப்போது விபத்தில் ஒரு கால் இழந்த சாந்தினி என்ற குழந்தைக்கு, செயற்கை கால் பொறுத்த ஆபரேஷன் செய்ய உதவி செய்துள்ளார். இனி அந்த குழந்தை இன்னொருவரின் உதவி இன்றி நடக்கமுடியும். நல்ல செயல்களில் இதுவும் மிகப்பெரிய நல்ல செயல்தானே... சமந்தாவை மனமார பாராட்டலாம். 



Find Out More:

Related Articles:

Unable to Load More