சினிமாவிலிருந்து பத்திரிகையாளரான ரித்திகா சிங்க்

Sekar Tamil
'இறுதி சுற்று' திரைப்படத்தில் பாக்ஸராக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த ரித்திகா தற்போது 'காக்கா முட்டை' திரைப்பட இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ள ''ஆண்டவன் கட்டளை'' திரைப்படத்தில் நடித்துள்ளார். 


இதில் ஹீரோவாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக ரித்திகாவும் நடித்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.


விஷயம் என்னவென்றால்.... இந்த படத்தில் ஐடி கம்பெனியில் பணிபுரிபவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதே போல, ரித்திகா தைரியமான பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறாராம். 


இந்தியாவில் நடைபெறும் கொலைகளை துப்பறியும் சிறந்த பத்திரிக்கை நிபுணராக அவர் இதில் நடித்துள்ளாராம். பாக்ஸராக நடித்து ஜெயிச்ச அவர் அடுத்து பெண் பத்திரிக்கையாளராக ஜெயிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Find Out More:

Related Articles: