அக்டோபர் 14-ல் வருதாம்....பஞ்சாயத்து நடிகையின் படம்...

frame அக்டோபர் 14-ல் வருதாம்....பஞ்சாயத்து நடிகையின் படம்...

Sekar Tamil
தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில், பஞ்சாயத்து கூறி வரும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது 'அம்மணி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது படமாகும். 


'அம்மணி' திரைப்படத்தில், அம்மணி கேரக்டரில், 82-வயது பாட்டி சுப்புலக்ஷ்மி நடித்துள்ளார். இவர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்பாடத்தில், த்ரிஷாவின் பாட்டியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் லட்சுமி ராமகிருஷ்ணன், ரோபோ ஷங்கர், ஜார்ஜ் மரியன், நிதின் சத்யா உள்பட பலர்  நடித்துள்ளனர். 


மேலும் 'டேக் என்டேர்டைன்மெண்ட்' சார்பில் வென் கோவிந்தா' இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை பணிகளை,இசையமைப்பாளர் கே மேற்கொண்டார்.


இதன் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் அக்டோபர் 14-ந்தேதி இப்படம் வெளிவருகிறது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.  மேலும், சமூகத்திற்கு நல்ல மெசேஜ், சொல்லும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Find Out More:

Related Articles:

Unable to Load More