கேப்பில் "கிடா" வெட்ட ரெடியாகும் விக்ரம்... அடுத்த படம் ஸ்டார்ட்?

Sekar Tamil
சென்னை:


அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டாராம் விக்ரம். ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவருக்கு இருமுகன்...ஏறுமுகம் காட்டி உள்ளது.


படம் வழக்கத்துக்கு மாறாக வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமையில் வந்தாலும் வசூல் கொளுத்தி எடுத்து வருகிறது. செமத்தியாக கல்லா கட்டி வரும் இந்த படம் அடுத்த வாரத்திற்குள் மொத்தம் ரூ.100 கோடியை அள்ளிவிடும் நிலையில் உள்ளது.


இருமுகனுக்கு அடுத்து சாமி 2 என்று ஆடியோ ரிலீசின் போதே அறிவித்துவிட்டார் ஷிபு தமீம்ஸ். ஆனால் ஹரி இன்னும் சிங்கம் 3 ஐ முடிக்காமல் உள்ளார்.


இந்த கேப்பில் அடுத்த படம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் விக்ரம். இந்த படத்தை எடுப்பவர் யார் தெரியுங்களா? இயக்குனர் சாக்ரடீஸ்தான். இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார் கோலிவுட் கோகிலாக்கா... கலக்குங்க சீயான்... கலக்குங்க...



Find Out More:

Related Articles: