ச்சீ... ச்சீ... ஆண்கள்... பஸ்சில் நடந்த சம்பவம்... டாப்ஸி வேதனை

Sekar Tamil
மும்பை:
பஸ்சில் சென்ற காலத்தில் ஆண்களின் அடாவடியால் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று வருத்தப்பட்டு சொல்லியுள்ளார் டாப்ஸி.


ஆடுகளம் அறிமுகமானவர் டாப்ஸி. படம் கொடுத்த செம ஹிட்டால் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என்று கிடைக்கும் வாய்ப்புகளில் தன் திறமையை காண்பித்து வருகிறார். 


இவர் நடித்துள்ள பாலிவுட் படம் பிங்க். இந்த படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டபோது தனது பிளாஸ்பேக் நினைவாக டாப்ஸி சொன்ன செய்திகள் அதிர்ச்சி ரகம்தான். என்ன தெரியுங்களா? ‘நான் டெல்லியில் இருந்த போது தினமும் ஈவ் டீஸிங்கில் சிக்கி உள்ளேன். 2 வருசம் கல்லூரிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தேன்.


நான் கார் வாங்கும் முன்பு டிசிசி பஸ்களில் செல்லும் போது ஆண்கள் கிண்டல் செய்வார்கள். அதை கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கண்ட இடங்களில் எல்லாம் என்னை தொட்டார்கள்’ என்ற அணுகுண்டு போல் ஒரு அதிர்ச்சி தகவலை போட்டு உடைத்தார் பாருங்க... அதுதான் வேதனையின் உச்சம்.


அடேய்... அடடடேய்... யாருடா அவனுங்க... இப்ப வாங்கடா... வாங்கடா... என்கின்றனர் ரசிகர்கள்.



Find Out More:

Related Articles: