தூள்... தூள் கிளப்புங்க... இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி...

Sekar Tamil
சென்னை:
தூள் கிளப்புங்க... தூள்கிளப்புங்க என்று செம ஸ்பீடு வாய்சில் பேசியவரால் திகைத்து போய்விட்டாராம் இந்த பிரபல நடிகர். இப்படி ஒரு அதிர்ச்சியை யார் கொடுத்திருப்பார்கள் என்று தெரியுங்களா? 


விஷயம் என்னன்னா? இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ் எடுத்து வரும் படம் பவர் பாண்டி. இதன் படப்பிடிப்பு கிடுகிடுவென்று நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது தனுஷ், நடிகர் ராஜ்கிரணிடம் தன் போனை கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போதுதான் அவருக்கு பெரிய இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


என்ன தெரியுங்களா? போன் லைனில் தனக்கே உரிய வேகத்தில் நலம் விசாரித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுமட்டுமா... பவர் பாண்டி மிகவும் அருமையான கதை. உங்களுக்கு பொருத்தமான கதை, தூள் கிளப்புங்க என்று படபடவென்று பேச... திகைத்து போய் நின்று விட்டாராம் ராஜ்கிரண். இது எப்படி இருக்கு!


Find Out More:

Related Articles: