சிக்கி தவித்த நடிகை... அச்சத்துடன் தப்பி வந்தார்...

Sekar Tamil
சென்னை:
கர்நாடகா கலவரத்தில் சிக்கி அங்கிருந்து அச்சத்துடன் உயிர் தப்பி வந்துள்ளார் சரவணன் மீனாட்சி சீரியலின் நாயகியும், தொகுப்பாளருமான சித்ரா என்று தற்போது தெரிய வந்துள்ளது. 


தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கர்நாடகாவில் பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். தமிழக வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில்தான் சரவணன் மீனாட்சி 2ம் பாகத்தில் நடித்து கலையரசி என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமான தொகுப்பாளினி சித்ராவும் சிக்கிக் கொண்டுள்ளார்.


ஒரு கன்னட சீரியலுக்கு சென்ற இவர் 10 நாட்களும் அச்சத்துடனேயே இருந்து வந்துள்ளார். திரும்பி வரும்போது கன்னடம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் ஊருக்கு வந்துள்ளார்.


ஒவ்வொரு சோதனைச்சாவடிகளிலும் காருக்கடியில் மறைந்தே வந்தாராம். தற்போது இதை நினைத்தாலும் அச்சத்துடன் கூறுகிறார்.


Find Out More:

Related Articles: