பெண் கவிஞர் இயக்கும் திரைப்படத்தில்....ஹீரோவானார் சமுத்திரக்கனி

Sekar Tamil
தமிழ்சினிமாவில் பெண் கவிஞராக பணிபுரிந்து வரும் குட்டி ரேவதியை, தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவர் 'மரியான்' திரைப்படத்தில் பாடல் எழுதி, பிரபலமானார். 


குட்டி ரேவதி


இதையடுத்து நயன்தாரா நடித்த 'மாயா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல் எழுதினார். இந்நிலையில் அவர் தற்போது, முதன்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்து உள்ளார். இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை தற்போது ரேவதி மேற்கொண்டு வரும் நிலையில், இதில் ஹீரோவாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளாராம். 


மேலும் இந்த படம் குறித்த முறையான அறிவிப்புகளை, விரைவில் வெளியிடுவதாக குட்டி ரேவதி தெரிவித்துள்ளார். 
அதனால் அதுவரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது...


Find Out More:

Related Articles: