மகேஷ் பாபுவின் பெரிய ஆசை....

Sekar Tamil
நடிகர் மகேஷ் பாபு தற்போது ஒரே நேரத்தில் உருவாகி வரும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்து வருகிறார். 


மேலும் வில்லனாக பிரபல இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் தற்போது வெளிவந்த தகவலில், இந்த படத்திற்கு மகேஷ் பாபு, சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேச உள்ளாராம். நீண்ட நாட்களாகவே, அவர் மனதில்  தமிழ் படத்திற்கு டப்பிங் பேசினால் நல்லாயிருக்கும் என்று எண்ணி இருந்தாராம். 


அந்த ஆசையை அவர்  இந்த படத்தில் நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: