அக்கறை... அன்பு... பாலா... அதான் ஒத்துக்கொண்டேன்...

Sekar Tamil
சென்னை:
அவர் எனக்கு தந்தை போல்... அவர் படத்தில் நடிக்க உடனே ஒத்துக்கொண்டேன் என்று சொல்லியிருக்கார் இந்த பொண்ணு.


எந்த பொண்ணு... சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வாயிலாக தமிழ் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்ட  பிரகதியேதான். இவர் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்ஒரு சில படங்களிலும் பாடினார்.


பாடகியாக வளர்ந்து வரும் நிலையில் இவருக்கு கிடைத்தது பாருங்க... செம வாய்ப்பு... தற்போது பாலா படத்தின் ஹீரோயின் ஆகிவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாலா சார் என் அப்பா மாதிரி. அவரும் என்னை ஒரு மகள் போல் தான் நடத்துவார்.


என்னை அழைத்து பேசும் போதே, நீ இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால், உன் கல்வி பாதிக்கப்படும் என்றால் வேண்டாம் என்றார். இதை கேட்ட உடனேயே கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்’ என்று சொல்லியிருக்கார்.


Find Out More:

Related Articles: