அடம்பிடித்தார்... அடங்கி போயிட்டார்... வரி விலக்குக்காக...

Sekar Tamil
சென்னை:
அடம் பிடிச்சவர்... இப்போ அடங்கி போயிட்டாராம்... வரிவிலக்குக்காக என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்லியிருக்காங்க... எதற்காக தெரியுங்களா?


இயக்குனர் முருகதாஸ் தமிழில் கத்தி படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். அப்புறம் பாலிவுட்டில் "அகிரா" படத்தை இயக்கினார். இப்போ தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் மகேஷ்பாபு படத்தை பரபரவென்று இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஆரம்பித்தில் எனிமி என்றுதான் பெயர் வைக்க வேண்டும். தமிழிலும் அதுதான் என்று செம ஸ்ட்ராங்காக முடிவெடுத்திருந்த அவர் இப்போ வரி விலக்குக்காக ஜகா வாங்கியிருக்கார்.


இப்போ படத்தின் பெயரை அபிமன்யூ என்று வைக்க முடிவு செய்திருக்காராம். இதாச்சும் கடைசி வரை நிற்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Find Out More:

Related Articles: