ஸ்பைடரை கைப்பற்றிய லைகா!!

J Ancie
 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் தமிழ்/தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ஆந்திர சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் "ஸ்பைடர்". இத்திரைப்படத்தில் மகேஷுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, எஸ் ஜே சூர்யா மற்றும் பரத் வில்லன்களாக நடிக்கின்றனர். 


பல ஒத்திவைப்புகளை அடுத்து ஆயுத பூஜை திருநாள் செப்டம்பர் 27 அன்று வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், "ஸ்பைடர்" திரைப்படத்தின் தமிழ்  வெளியீட்டு உரிமையை பெரும் விலைகொடுத்து லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ஒரு முன்னணி தமிழ் கதாநாயகனின் திரைப்பட வெளியீட்டிற்கு நிகரான அளவு திரையரங்குகளும், மிகப்பெரிய ஓப்பனிங் வசூலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




தற்பொழுது பல நூறு கோடிகள் பொருட்செலவில் உருவாகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஷங்கரின் 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா, இதற்கு முன்னர் ஏ.ஆர்.முருகதாஸின் "கத்தி" (2014) திரைப்படத்தை தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: