சிங்கீதத்தின் பாராட்டை பெற்ற கீர்த்தி

SIBY HERALD
நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்து வெளியாகியுள்ள படம் மஹாநடி. தமிழிலும் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்படத்தை. நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும். பத்திரிகையாளர்களாக சமந்தாவும். விஜய் தேவரகொண்டாவும். இன்னும் சில முக்கிய வேடங்களில் நாக சைதன்யா. பிரகாஸ்ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ள இப்படம் .அனைவரின் பாராட்டுகளையும் பெற்று சிறப்பாக ஓடி வருகிறது. 



வெளியாகி மூன்றே நாட்கள் ஆன நிலையில். மஹாநடி முப்பது கோடிகளை  உலகளவில் வசூல் செய்துள்ளது. இது மட்டுமின்றி அமெரிக்காவிலும், ஒன்றரை மில்லியன் டாலர்கள் சம்பாதித்து அங்கும் புதிய சாதனைகளை படைத்தது வருகிறது மஹாநடி. தெலுங்கு திரையுலகின் முக்கிய புள்ளிகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சிரஞ்சீவி, கமலஹாசன், நாகர்ஜுனா, ஜுனியர் என்டிஆர், நாணி என, அனைவரும் கீர்த்தியின் நடிப்பை பாராட்டி வரும் நிலையில், அவருக்கு பெரிய ஒரு பாராட்டு கிடைத்துள்ளது.



 பழம்பெரும் இயக்குனரான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தனது முகப்புத்தக பக்கத்தில், கீர்த்தியுடன் தான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "நான் சாவித்ரி அம்மாவுடன் புகைப்படம் எடுத்திருக்கிறேனா? என்று என்னிடம் பலரும் கேட்டுள்ளனர். இதோ  அந்த புகைப்படம்" என்று பகிர்ந்துள்ளார். இதன் மூலம் கீர்த்தி சுரேஷின் உருவில் அந்த மாபெரும் நடிகையை காண்பதாக, இத்தகைய ஒரு சிறந்த இயக்குனர் கூறியுள்ளதால், பூரித்து போயுள்ளார் கீர்த்தி. 


Find Out More:

Related Articles: