பார்ட்டியே கதியான பப்ளி நடிகை

SIBY HERALD
நடிகை ஹன்சிகா மோத்வானி ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் கதாநாயகியாக ஆன அவர், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே கவர்ச்சியின் மூலமாகவே காலத்தை ஓட்டி வந்தார். 



கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ஹன்சிகா இன்று வரை எந்த படத்திலும் தனது வசனங்களுக்கு சரியாக வாய் அசைத்ததே இல்லை. ஆனாலும் நோகாமல் தனது அதிரடி கவர்ச்சியால், கொழுக் மொழுக் மேனியழகாலும் ,வாளிப்பான இடையழகாலுமே வாய்ப்புகள் பெற்று வந்தார். 



ஆனால் சில படங்களின் தோல்வி மற்றும் நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட காதல் மற்றும் அதன் தோல்வியை தொடர்ந்து ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. மேலும் தேவையே இல்லாமல் இவர் அதீத எடை குறைப்பில் ஈடுபட்டதால், மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறவே, இவரை பப்ளி பெண்ணாகவே பார்த்து பழகி ரசித்த ரசிகர்களுக்கே இவரை பிடிக்காது போனது. இப்பொழுது ஒரு சோலோ ஹீரோயின் படத்திலும் மேலும் ஒன்றிரண்டு சிறிய படங்களிலும் மட்டுமே தற்சமயம் நடித்து வரும் ஹன்சிகா, எப்பொழுது பார்த்தாலும் பார்ட்டியே கதி என்று கிடைப்பதால் படங்கள் எதுவும் இனிமேல் கமிட் ஆக மாட்டார் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: