விஜயுடன் நடித்தது வேதனை

SIBY HERALD
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் ஜபல்பூர் அழகியான ஷாலினி பாண்டே. இந்த ஒரே படத்தாலேயே பிரபலம் ஆன ஷாலினி, சமீபத்தில் தனது திரையுலக ப்ரவேசத்துக்கு முந்தைய வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். 



இன்ஜினியரிங் படித்தவராக ஷாலினி ஒரு சாப்ட்வெர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் எண்ணமாக இருந்தது.  ஆனாலும் அவர்களின் எதிர்ப்பை மீறி, அவர்கள் "நீ நடிக்க போனால் பிச்சை தான் எடுப்பாய்" என்று திட்டியும் கூட சினிமா தான் வேண்டும் என்று வந்தவர் தான் ஷாலினி. மும்பையில் தானும் ஒரு தோழியும், இரண்டு ஆண்களுடன் ஒன்றாக தங்கியிருந்து நடிக்க வாய்ப்புகள் தேடியதாகவும், அந்த ஆண்கள் மிகவும் கண்ணியமாக  நடந்து கொண்டதாகவும் கூறினார் ஷாலினி.



 அர்ஜுன் ரெட்டி படத்திற்கு முன்பே இரண்டு முறை காதல் தோல்வி அடைந்தவர் ஷாலினி. அர்ஜுன் ரெட்டியின் எதிரிப்பாரா மாபெரும் வெற்றிக்கு பின்னரே ஷாலினியின் பெற்றோர் அவரை ஏற்று கொண்டனர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டியில் காதல் காட்சிகளில்  விஜயுடன் நெருக்கமாக நடித்த போது, தனது முதல் காதல் அனுபவங்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்ததால், மிகவும் வேதனையுடன் நடித்ததாக கூறியுள்ளார் ஷாலினி பாண்டே. இப்பொழுது தெலுங்கில் கல்யாண் ராமுடன் ஒரு படமும், தமிழில் 100% காதல் மற்றும் கொரில்லா படங்களிலும் இவர் நடித்து வருகிறார். 


Find Out More:

Related Articles: