மீண்டும் சிவாவுடன் கீர்த்தி!

SIBY HERALD
இன்று மஹாநடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாகவே அவர் வாழ்ந்திருந்ததாக அணைத்து பத்திரிகைகளும் மீடியாவும் பாராட்டி வரும் நிலையில் அப்படமு நாற்பது கோடிகளை தாண்டி வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.



 மேலும் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டும் பன்மடங்கு பெருகியதோடு மட்டுமின்றி அவரது சம்பளமும்  கோடிகளை தாண்டும் என எதிரிபார்க்க படுகிறது. இந்நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் ஒரு ஆச்சர்யமான முடிவை எடுத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்கள் தான் இவரின் முதல் அடையாளங்கள் ஆகும்.



 அந்த படங்களின் வெற்றியின் மூலமாகவே அனைவராலும் அறியப்படும் நடிகை ஆனார் கீர்த்தி. இப்பொழுது ரஜினிமுருகன் இயக்குனர் பொன்ராம் இயக்க சிவ கார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்து வரும் சீமராஜா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம் நட்புக்காக. இதற்கு முன் மஹாநடி படத்தில் மெயின் நாயகியாக கீர்த்தி நடிக்க, மதுரவாணி என்ற பத்திரிகையாளராக சமந்தா சிறு வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது


Find Out More:

Related Articles: