மீண்டும் வரும் யாஞ்சி

SIBY HERALD
சென்ற ஆண்டின் மிக பெரிய பிளாக்பஸ்டார்களில் ஒன்று விக்ரம் வேதா. இயக்குனர் ஜோடி புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கிய இந்த படத்தில் மாதவன் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு மரண மாஸான கேங்ஸ்டர் ஆகவும் நடித்திருந்தனர். இந்த படம் இந்த இரு நாயகர்களின் கேரியரில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.



மேலும் இப்படத்தில் மாதவன் ஜோடியாக கன்னட அழகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இவர்கள் இருவரின் காதல் காட்சிகள் மற்றும் இவர்கள் இனைந்து தொடர அனிருத் பாடிய யாஞ்சி பாடல் இவர்கள் ஜோடியை சிறப்பான ஒன்றாக நிறுவியது. இப்பொழுது இந்த யாஞ்சி ஜோடியான மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.



மாறா என்று பெயரிட பட்டுள்ள அந்த படத்தில் ஷ்ரத்தா ஒரு சுதந்திரமான பெண்ணாகவும் மாதவன் ஒரு நாடோடியாகவும் நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கவுள்ள இந்த படம் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி நடிப்பில் மலையாளத்தில் மெகா ஹிட்டான சார்லி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் ஒரு அழகாக காதல் கதை என்று கூற படுகிறது. மாறா படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் குன்னூர் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது. 


Find Out More:

Related Articles: