தனுஷுடன் இணைந்த மாரி!

SIBY HERALD
இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோருடன் பணியாற்றியவரான இயக்குனர் மாரி செல்வராஜ் சென்ற மாதம் வெளியான படமான பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் மாரிமுத்து ஆகியோர் நடித்திருந்த இந்த படம் முதலில் மிக குறைவான தியேட்டர்களிலேயே ரிலீஸ் ஆனாலும் கூட மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்று திரையரங்குகள் அதிகரித்தது.



இதனை தொடர்ந்து படம் சிறப்பான விமர்சனங்களையும் பெற்று ஐம்பது நாட்களை தாண்டி ஓடி வருகிறது. இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் தான் பரியேறும் பெருமாள் படத்தை இப்பொழுது



தான் பார்த்ததாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் பாராட்டியதோடு மட்டுமின்றி மாரி செல்வராஜின் அடுத்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க அதில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளத்தையும் அறிவித்தார். 


Find Out More:

Related Articles: