பாலையாவுடன் சேரும் மாளவிகா!

SIBY HERALD
நடிகை மாளவிகா நாயர் மலையாள மங்கை ஆவார். எழுத்தாளரான ராஜு முருகனின் முதல் படமான குக்கூ படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் மாளவிகா நாயர். குக்கூ படத்தில் பார்வை இழந்த பெண்ணாக எமோஷனலான நடிப்பை வழங்கி பாராட்டுகளை பெற்றார் மாளவிகா.



ஆனால் இந்த படத்தை அடுத்ததாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தெலுங்கிற்கு சென்ற மாளவிகா அங்கு எவடே சுப்பிரமணியம் மற்றும் கல்யாண வைபோகமே ஆகிய ஹிட் படங்களில் நடித்தார்.



மேலும் மஹானடி படத்தில் ஜெமினி கணேசனின் முதல் மனைவியாகவும் தோன்றினார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க க்ரிஷ் இயக்கி வரும் என்.டி.ஆர் பயோபிக்கில் மாளவிகா நாயர் பழம்பெரும் நடிகை க்ரிஷ்ணகுமாரியின் வேடத்தில் நடிக்க உள்ளாராம். 


Find Out More:

Related Articles: