மூன்று டைரக்டர்களுடன் ஜோதிகா!

SIBY HERALD
நடிகை ஜோதிகா சென்ற ஆண்டு மூன்று படங்களில் நடித்தார். பாலாவின் இயக்கத்தில் நாச்சியார், மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என மூன்று படங்களுமே ஹிட் ஆகின. இதனை அடுத்ததாக ட்ரீம் வாரியார் தயாரிப்பில் ராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.



இதனை அடுத்ததாக அவரது கணவர் சூர்யாவின் 2 D  என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவரின்  படத்தில் நடிக்கவுள்ளாராம்.



இந்த படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து மூன்று இயக்குனர்கள் - பாரதிராஜா, பார்த்திபன் மற்றும் பாக்யராஜ் நடிக்க உள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பாக்யராஜ் பாரதிராஜாவின் அசிஸ்டன்ட் ஆகயிருந்தவர், பார்த்திபன் பாக்யராஜின் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர் ஆவார். 


Find Out More:

Related Articles: