மீண்டும் பாக்ஸராகும் ரித்திகா!

SIBY HERALD
நடிகை ரித்திகா சிங் கடைசியாக தெலுங்கில் நீவேவரோ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் தமிழில் ஹிட்டான அதே கண்கள் படத்தின் ரீமேக்காகும். இதனை அடுத்ததாக கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக படமே இல்லாமல் இருந்தவர், அடுத்ததாக  ஒப்பந்தமாகியுள்ள படம் தான் பாக்ஸர்.



இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்க, அருண் விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரித்திகா சிங் ஒரு விளையாட்டு செய்தி நிருபராக நடிக்கவுள்ளார், பாக்ஸர் ஆகவிரும்பும் பெண்ணாகவும் நடிக்கவுள்ளார்.



நிஜத்தில் இவர் ஓர் பாக்ஸர் ஆவார். மேலும் அறிமுகமான படமான மாதவன் நடித்த இறுதி சுற்று படத்தில் பாக்ஸராகவும், விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிகையாளராகவும் நடித்தது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: