த்ரிஷா எஸ்கேப், மாட்டிக்கொண்ட கீர்த்தி

SIBY HERALD
2003ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் ,சீயான் விக்ரம், ஆறுச்சாமி என்ற போலீஸ் அதிகாரியாக திருநெல்வேலி கதைக்களத்தில் வெறித்தனமான மாஸ் நடிப்பில் மிரட்டியிருப்பார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.



 அதுவரையில் மௌனம் பேசியதே போன்ற படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த த்ரிஷா முதல்முறையாக சாமி தான் "அய்யய்யோ புடிச்சிருக்கு", "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" போன்ற பாடல்களில் தன இடையழகை கட்டி கவர்ச்சி நாயகி ஆனார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த சிம்ரன் த்ரிஷா தான் என்ற ரீதியில் இடுப்பழகி என்று பெயர் பெற்றார். 



ஆனால் தற்பொழுது உருவாகி வரும் சாமியின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயரில் த்ரிஷா இல்லை. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விக்ரம் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. த்ரிஷாவும் இல்லை, ஹாரிஸ் ஜெயராஜும் இல்லை, ஹரியின்  ஒளிப்பதிவாளர் ப்ரியனும் இல்லை என்று நாம் பார்த்தால், படத்தில் கதையே இருக்காது போல. நான் சாமி இல்ல பூதம், நான் பேய் வயித்துல பொறந்தவன், போன்ற காமெடி வசனங்களால் படத்தின் ட்ரைலர் அனைவராலும் கலாய்க்க பட்டு வருகிறது. இதனால் கீர்த்தி மாட்டிகிட்டார், த்ரிஷா தப்பிச்சுட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். 


Find Out More:

Related Articles: