மீண்டும் வாய்ப்பை இழந்த துல்கர்!

SIBY HERALD
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கிலும் கால் பதித்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறார். இந்த ஆண்டில் தெலுங்கில்  மகாநதி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர், அதில் ஜெமினி  கணேசனாக  நடித்து  புகழ்  பெற்றார்.



இதனை  தொடர்ந்து ஹிந்தியிலும் கர்வான் என்ற  படத்தில் அறிமுகம் ஆனார். இந்நிலையில் இவர் அடுத்ததாக கரண் ஜோஹ்ரின் தயாரிப்பில் பைலட்டான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை படத்தில் நடிகை ஜானவி கபூரின் காதலராக நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின.



ஆனால் இப்பொழுது அந்த செய்தி பொய்யாகி விட்டது. அந்த வேடத்தில் நடிகை நேஹா துபியாவின் கணவர் அங்கத பேடி தான் நடிக்க உள்ளாராம். என்றாலும் கூட துல்கரின் கைவசம் சோனம் கபூர் ஜோடியாக நடிக்கும் சோயா பேக்டர் ஹிந்தி படம் உள்ளது.


Find Out More:

Related Articles: