ஜூலையில் மீண்டும் சுந்தர்.சி!

SIBY HERALD
இயக்குனர் சுந்தர்.சி தலைநகரம் படத்தை அடுத்ததாக பல படங்களில் ஹீரோவாக நடித்து தள்ளினார். எதுவுமே தலைநகரம் ஓடிய அளவுக்கு ஓடவில்லை.



இதனால் மீண்டும் இயக்கத்துக்கே வந்து அரண்மனை, அரண்மனை 2 , தீயா வேல செய்யணும் குமாரு, கலகலப்பு, கலகலப்பு 2 என இயக்கி தள்ளினார். கடைசியாக முத்தின கத்திரிக்கா படத்தில் ஹீரோவாக நடித்தவர், கடைசியாக சிம்புவை வைத்து வந்தா ராஜாவைத்தான் வருவேன் படத்தை இயக்கி படுதோல்வியை சந்தித்தார்.



மீண்டும் ஹீரோவாக வீ.இசட்.துரை இயக்கத்தில் இருட்டு என்ற படத்தில் தன்ஷிகா ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் ஜூலை அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. 


Find Out More:

Related Articles: