முடிக்கப்பட்டது ஆதித்ய வர்மா!

SIBY HERALD
சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்க துருவின் முதல் படமாக உருவாகி வந்த படமான வர்மா திரைப்படத்தை வெளியிட  தயாரிப்பு நிறுவனம் E4  வேண்டாம் என்று முடிவெடுத்த நிலையில் படத்தில் இருந்து பாலா விலகி கொள்ள, மொத்த படமும் குப்பையில் வீசப்பட்டு  படம் மீண்டும் முதலில் இருந்து புதிதாக மற்றுமொரு  இயக்குனரின் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. 



கடந்த ஐம்பது நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது அதிவிரைவில்  முடிவுக்கு வந்துள்ளது.அறிமுக இயக்குனர்  கிரிசய்யா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆதித்யா வர்மா படத்தில்  துருவ் விக்ரம் ஜோடியாக பாலிவுட் நடிகை  பனிதா சந்து நடித்துள்ளார்.

அவரை தவிர பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர்  ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். 


Find Out More:

Related Articles: