அடுத்த படத்தை முடித்த டாப்சீ!

நடிகை டாப்சீ ஆடுகளம் மற்றும் காஞ்சனா டூ  படங்களை  தவிர தமிழில் எதுவும் பெரிய ஹிட் படத்தில் நடிக்கவில்லை. தெலுங்கிலும் மிஸ்டர் பெர்பெக்ட் மற்றும் சென்ற ஆண்டு வெளியான ஆனந்தோ பிரம்மா  படங்களை தவிர ஹிட் படம் எதிலும் நடிக்கவில்லை.


ஆனால் ஹிந்தியில் இவருக்கு மவுசு அதிகமாகி உள்ளது. டூ பீஸ் பிகினி அணிந்து படு செக்சியாக நடித்த ஜூடுவா டூ படம் ஆகட்டும் வக்கீலாக நடித்த படமான முல்க் ஆகட்டும் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடித்த படமான மண்மரசியான் படம் ஆகட்டும் மாறுபட்ட வேடங்களில் டாப்சீ பானு வெறித்தனமாக பாலிவுட்டில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தான் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கிற்கு வர உள்ளார். மாயா மற்றும் இறவாகாலம் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணனின் இயக்கத்தில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்து வந்தார் டாப்சீ.



இந்த படத்தில் ஒரு ஆக்சிடென்டின் பிறகு வீல்சேரில் முடங்கி போகும் ஒரு வீடியோ கேமர்  பெண்ணாக நடித்துள்ளார் டாப்சீ. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கிய இந்த படம் மிக விரைவாக ஷூட்டிங்கை இன்று முடிந்துவிட்டது. கேம் ஓவர் படம் மார்ச் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Find Out More:

Related Articles: