பறந்த விமானத்தில் நெஞ்சுவலியால் தொழில்அதிபர் பலி

Sekar Chandra
சென்னை:
பறந்த விமானத்தில் நெஞ்சுவலியால் தொழில் அதிபர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


இந்தோனேசியாவில் இருந்து துபாய்க்கு நேற்று இரவு விமானம்  புறப்பட்டது. நடுவானில் பறந்த கொண்டிருந்த போது திடீரென அதில் பயணம் செய்த இந்தோனேசியா தொழில் அதிபர் அவாத்ஷீபானுக்கு (55) கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் மிகுந்த வேதனைப்பட்ட அவரை காப்பாற்ற விமான பணியாளர்கள் முயற்சி செய்தனர்.


தகவலறிந்த விமானிகள் விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டனர். உடன் விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானநிலையத்தில் அந்த பயணிக்கு தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். 


விமானம் வந்தவுடன் அந்த தொழில் அதிபர் இறக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்தனர், இச்சம்பவம் சக பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


Find Out More:

Related Articles: