மாமியார் வீட்டில் களவாடிய மருமகன்... "மாமியார்" வீட்டு அனுப்பப்பட்டார்

Sekar Chandra
ஈரோடு :
மாமியார் வீட்டில் களவாடிய மருமகன் "மாமியார்" வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


ஈரோடு கல்யாண சுந்தரனார் வீதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவரது சின்ன மாமியார் நாகஜோதி. ஈரோடு அருகே  பள்ளியூத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ்குமார் சின்னமாமியார் நாகஜோதி வீட்டுக்கு சென்றுள்ளார். 


அப்போது நாகஜோதி, அவரது மகள் நந்தினி ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த 8 சவரன் நகையைக் வீட்டில் கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளனர். குளித்து விட்டு திரும்பி வந்தபோது நகைகள் மாயமாய் மறைந்து போய் விட்டது. எப்படி நகைகள் காணாமல் போகும் என்று கவலையடைந்த இருவருக்கும் சந்தோஷ்குமார் மீது சந்தேகம் திரும்பியது.


அதற்கு ஏற்றார் போல் சந்தோஷ்குமாரும் எஸ்கேப். அப்புறம் என்ன போலீசுக்கு புகார் பறக்க எஸ்கேப் ஆன மருமகனை பிடித்து அவரிடமிருந்து நகைகளை மீட்ட போலீசார் அவரை மாமியார் (சிறை) வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்


Find Out More:

Related Articles: