பெய்யாமலும் கெடுக்குது... பெய்தும் கெடுக்குது... பாட்னா சோகம்

Sekar Tamil
பாட்னா:
சோகம்... சோகம்... என்று பீகாரே சோகத்தை பூசிக்கொண்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம்... இப்போ...தண்ணீரால் வேதனைப்படுகிறோம் என்று புலம்புகின்றனர் பீகார் மக்கள்.


காரணம்... பீகார் மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் சோகத்திற்கு காரணம்.


பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால் கோஷி நதி உட்பட பல்வேறு ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சோகம் ஏற்பட்டுள்ளது. 


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சம் வரை உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் தண்ணீருக்கு பிரச்னை ஏற்பட்டது. இப்போது அதிக அளவு தண்ணீரால் பிரச்னை என்று நொந்து போய் உள்ளனர் பீகார் மக்கள்.


Find Out More:

Related Articles: