யார் என்று தெரியுமா... வாலிபரை பின்னி எடுத்த பெண் போலீஸ்

frame யார் என்று தெரியுமா... வாலிபரை பின்னி எடுத்த பெண் போலீஸ்

Sekar Tamil
சீதாப்பூர்:
யார்ன்னு தெரியாம வாலை ஆட்ட ஒட்ட நறுக்கிய பெண் போலீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷயம் என்னன்னா?


உத்தரபிரேதச மாநிலம் சீதாபூரில் சாதாரண உடையில் இருந்த பெண் போலீசை வாலிபர் ஒருவர் கிண்டல் அடிக்க... அப்புறம் என்ன அந்த பெண் போலீஸ் வெளுத்து எடுத்து கைது செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சீதாபூரில் பெண் போலீஸ் ஒருவர் சாதாரண உடையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் அந்த பெண் போலீசை யார் என்று தெரியாமல் கிண்டல் செய்துள்ளார்.


இதையடுத்து அந்த பெண் போலீஸ் அந்த வாலிபரை பைக்கில் இருந்து இறக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் அந்த வாலிபர் பெண் போலீசின் கையில் இருந்த மோதிரத்தை பறித்துள்ளார்.


அவ்வளவுதான் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் வாலிபரை புரட்டி எடுத்துவிட்டார். பொதுமக்கள் வேடிக்கை பார்க்க விரைந்து வந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். அப்புறம் என்ன கிண்டல் செய்தவர் இப்போது கம்பி எண்ணி வருகிறார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More