இடியாப்ப சிக்கலாகும் சுவாதி கொலை வழக்கு...

Sekar Tamil
சென்னை:
இடியாப்ப சிக்கல்... அதிலும் ஒரு சிக்கல் என்பதுபோல்தான் உள்ளது சுவாதி கொலை வழக்கு. இப்போ வெளிவந்துள்ள அடுத்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன தெரியுங்களா?


இதே அந்த அதிர்ச்சி... நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜீன் மாதம் 24-ம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது தெரிந்த விஷயம். தற்போது இந்த வழக்கில் நாளொரு டுவிஸ்ட் செய்திகள் வெளிவருவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சுவாதியை கொல்ல கொலையாளி பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்பது தெரியவந்துள்ளது. அப்போ இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா என்பதை உறுதிபடுத்த ராம்குமாரின் ரத்த மாதிரி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டள்ளதாம்.


ஆனால் கைதான ராம்குமாருக்கு கொலை சம்பவத்தின் போது எவ்வித காயங்களும் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லாத போது அந்த இன்னொரு ரத்தம் யாருடையது என்பதுதான் தற்போதைய அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.


Find Out More:

Related Articles: