நிபந்தனையின்றி விசாரணைக்கு வர சம்மன்... சம்மன்...

Sekar Tamil
கவுகாத்தி:
வாங்க... அவதூறு வழக்கில் ஆஜராக வாங்க என்று கவுகாத்தி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. யாருக்கு தெரியுங்களா?


வேறு யாருக்கு? காங். துணைத் தலைவர் ராகுல் காந்திக்குதான். கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், மகாத்மா காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்., தான் என்று பேசிவிட்டு சென்றார்.


டென்ஷனான ஆர்.எஸ்.எஸ். ராகுல் மீது அசாம் மாநிலம் கவுகாத்தி கோர்ட்டில் அவதூறு வழக்கை போட இந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி கோர்ட், ராகுலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.


செப்டம்பர் 29ம் தேதி ராகுல் ஆஜராக வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. இந்த சம்மனில் எவ்வித நிபந்தனையுமின்றி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருக்காங்களாம். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. 


Find Out More:

Related Articles: