ரயிலுக்கும் தீ வைப்பு... பயணிகளுக்கும் கத்திக்குத்து...

Sekar Tamil
ஜெனீவா:
சுவிட்சர்லாந்தில் ரயிலுக்கு தீவைத்து பயணிகளை கத்தியால் குத்திய வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


சுவிட்சர்லாந்தில் ஜெனீவா அருகே ஒரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயில் புச்ஸ்- சென்வால்ட் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போதுதான் ஒரு விபரீதம் நடந்தது.


ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த திரவத்தை ரெயில் பெட்டியில் கொட்டி கவிழ்த்தார். உடனே அதில் இருந்து கரும்புகையுடன் தீ வெளியாகி பெட்டி முழுவதும் பரவியது. அவ்வளவுதான் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பெட்டியில் அங்கும் இங்கும் ஓடினர். 


அப்போது அந்த கொடூர வாலிபர் செய்த செயல் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தான் வைத்திருந்த கத்தியால் பயணிகளை சரமாரியாக குத்த ஆரம்பித்தான். இதில் 6 பேர் காயமடைந்தனர். 


தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான வாலிபர் தப்பி சென்று விட்டான். அவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 



Find Out More:

Related Articles: