சென்னை, டில்லியில் சுதந்திர தின விழா கொடியேற்றம்...

Sekar Tamil
சென்னை:
தமிழகத்திற்கும் முக்கிய பங்குண்டு... எதற்கு தெரியுங்களா. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


தலைமை செயலக கோட்டை முகப்பில் சுதந்திர தினவிழாவில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்திய சுதந்திர தின போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு. விடுதலை வேட்கையை தட்டி எழுப்பியவர் வாஞ்சிநாதன். டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பே இங்கு தேசியக்கொடியை ஏற்றியவர் வாஞ்சிநாதன்.


உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தில் தான் உள்ளது. சிறந்த கல்வி, சிறப்பான பொருளாதாரமே தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியம் என்று தெரிவித்தார்.


Find Out More:

Related Articles: