வெள்ளத்தின் நடுவில் பிறந்த வெள்ளை உள்ளம்... ஆனந்த கண்ணீர்

Sekar Tamil
உத்தரபிரதேசம்:
சுற்றிலும் தண்ணீர்... தண்ணீர்... மீட்டு வந்தபோது கர்ப்பிணிக்கு படகிலேயே குழந்தை பிறந்ததால் அனைவருக்கும் ஆனந்தக்கண்ணீர் வந்தது. இது நடந்தது. உத்தரபிரதேசத்தில்.


உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 


 இதேபோல் பாந்தா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவரை மீட்டு படகில் அழைத்து வரும் போது அவருக்கு பிரசவ வலி ஏற்படவே... படகிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணும், குழந்தையும் பாதுகாப்பான இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.



Find Out More:

Related Articles: