மர்ம பொருள் வெடித்தது... நியூ ஜெர்சி மக்கள் அதிர்ச்சி

frame மர்ம பொருள் வெடித்தது... நியூ ஜெர்சி மக்கள் அதிர்ச்சி

Sekar Tamil
நியூயார்க்:
டம்...டமார் என்று மர்ம பொருள் ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரயில் நிலையம் அருகே வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. 


அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபத் ரயில் நிலையம் அருகே ஒரு மதுபான விடுதி உள்ளது. இதன் அருகே ஓரமாக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியில் பயங்கர சப்தத்துடன் ஒரு மர்மப் பொருள் வெடித்து சிதறியது.


குப்பைத் தொட்டியில் கிடந்த மர்மப் பொருளை, வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் ரோபோட் கத்திரித்து, பரிசோதிக்க முயன்றபோது, அது திடீரென வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகின.


அந்த மர்மப் பொருள் வெடித்தபோது, குப்பைத் தொட்டியின் அருகில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாதிகளின் செயலா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 


Find Out More:

Related Articles:

Unable to Load More